இந்த நேரத்தில் அவர் தன் மூத்தமகளிடம் முறைதவறி நடந்து கொண்டார். கிட்டத்தட்ட தினமும்..
இரவு நேரத்தில் அவர் தன் மகளை கற்பழித்தார். இந்த சம்பவம் 2001-ம் ஆண்டு நடந்தது. அடுத்த ஆண்டு தன் உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது அவர்களிடம் சொல்லி அழுது இருக்கிறார்.
இதை அவர்கள் அவளது தாயாரிடம் தெரிவிக்க அவர் ஆங்காங் வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டார். தாயும் மகளும் சேர்ந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் தந்தை மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. விஷ ஊசி போட்டு தண்டனையை நிறை வேற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்று அவர் கூறிஇருந்தார். மனு விசாரணையில் இருந்தபோதே, மரண தண்டனை விதிப்பதை அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்து விட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அவருக்கு 14 ஆயிரத்து 400 ஆண்டுகள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
No comments:
Post a Comment