சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் குப்பன். இவர் மனைவியைக் கொலை செய்து கைதாகி..
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த 7 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
இந்நிலையில் புழல் சிறையில் நேற்று தனது அறைக் கதவின் கம்பியில் தூக்குப் போட்டு குப்பன் தற்கொலை செய்துகொண்டார்.
தன்னை வந்து யாரும் பார்க்கவில்லையே என்ற விரக்தியில் குப்பன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment