சென்னை: நான் நயன்தாராவை திருமணம் செய்யப் போவது உறுதி. யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. சொல்லப் போனால் நயன்தாராவை திருமணம் செய்ய இதுதான் சரியான தருணம், என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
இது குறித்து அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:
எதற்கும் தகுந்த நேரம் என்று ஒன்று இருக்கிறது. நயன்தாராவை பற்றி பேசுவதற்கும் இதுதான் சரியான நேரம். ஏனென்றால் நாங்கள் இருவரும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.
இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதா? அல்லது எளிமையாக நடத்துவதா? என்றும் இன்னும் திட்டமிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்.
இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் பற்றி எனக்கு கவலையில்லை. அனைத்துப் பிரச்சினைகளையும் சட்டப்படியே எதிர்கொள்ளப் போகிறேன். யாருடைய தடையும் இந்தத் தி்ருமணத்தை தடுத்து நிறுத்த முடியாது.
இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக உள்ள என் பெற்றோருக்கு நன்றி. ரம்லத் விஷயம் குறித்து இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை...," என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
நயனதாராவை 2வது தாரமாக்குவதில் படு தீவிரமாகத்தான் இருக்கிறார் பிரபுதேவா என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
No comments:
Post a Comment